மும்பையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஜாகுவார் ரக கார் பத்து கார்களின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது. மும்பையின் அந்தேரி புறநகர்ப் பகுதியில் உள்ள வெர்சோவா பகுதியில் திங்கட்கிழமை அன்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


ஹிதேஷ் கொலேச்சா என அடையாளம் காணப்பட்ட அந்த காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 7.30 மணி அளவில் நடந்தேறிய இந்த நிகழ்வு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


தப்பிக்க முயன்ற ஹிதேஷை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். கோபமடைந்த மக்கள் அந்த நபர் ஓட்டிவந்த ஜாகுவார் காரையும் சேதப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட சிலர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 24, 2018 6:04 PM #JAGUAR #10CARSHIT #MUMBAI #VERSOVA #ANDHERI #INDIA NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS