capmaari 90 others

செம ! பிகிலுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழாவுடன் இணையும் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் 'பிகில்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது.

Poovaiyar joins with Hiphop Tamizha for single after Bigil

குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருந்த வெறித்தனம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்து. இந்த பாடலில் சிறுவன் பூவையார் சூராங்கனி... என விஜய்யுடன் இணைந்து அசத்தலாக பாடியிருப்பார்.

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பூவையாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ''இந்த குட்டி பையனுக்கு மிகப் பெரிய ரசிகன், நான் ஒரு பாடலுக்கு இவருடன் இணைந்து பணிபுரிவேன் என்று நம்பிக்கை கொடுத்திருந்தேன். அது முடிந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Poovaiyar joins with Hiphop Tamizha for single after Bigil

People looking for online information on Bigil, Hiphop Tamizha, Poovaiyar will find this news story useful.