கொரோனா: ”…கொஞ்சம் தண்ணியாவது கொடுங்க”- பிரபல ஹீரோயின் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கு எண் 18/9 படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அமல் படுத்தப் பட்டுள்ளது. அனைத்து தொழில் கூடங்களும், அலுவலகங்களும் முடங்கியுள்ள நிலையில் சிலர் வீட்டில் இருந்தவாறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி, சினிமா, உணவு என்று அனைத்து துறைகளுக்கும் இதே கதி தான். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் ஒரு சில கடைகள் குறைந்த நேரம் இயக்கப்பட்டு வருகின்றன. மனித தேவைகளுக்கே பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் சாலையில் வாழும் விலங்கினங்கள் உணவுக்காக திண்டாடி வருகின்றன.

இந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் வெளியிட்ட பதிவு ஒன்றில் அவர் சாலைகளில் வாழும் நாய்களுக்கு உணவிடுவதை பதிவு செய்திருக்கிறார். இந்த இக்கட்டான வேளையில் உணவுக்காக கஷ்டப்படும் விலங்குகளுக்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீராவது வையுங்கள் என அவர் அந்த பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Entertainment sub editor

Manisha Yadav posts about feeding dogs while Quarantine | கொரோனா ஊரடங்கு நேரத்தில் நாய்களுக்கு உணவிடுவது பற்றி நடிகை மனிஷா யாதவ�

People looking for online information on Manisha Yadav will find this news story useful.