மிரட்டலான கெட்டப்பில் நடிகை கஸ்தூரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சவுத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை கஸ்தூரி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

Kasthuri shankar to don a Police avatar for her next film IPC section 302

நடிகர் கரண் நடித்த ‘காத்தவராயன்’ திரைப்படத்தை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி வரும் “இ.பி.கோ 302” திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை கஸ்தூரி நடிக்கிறார்.

துர்கா ஐ.பி.எஸ் என்ற வலுவான கதாபாத்திரத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இப்படத்தில் இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகை வையாபுரி, ராபின் பாபு, போண்டாமணி, வினிஸ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

தண்டபாணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முத்துவிஜயன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kasthuri shankar to don a Police avatar for her next film IPC section 302

People looking for online information on IPC302, Kasthuri will find this news story useful.