ஊரடங்கு எதிரொலி - மகனுக்கு தானே முடிவெட்டிய பிரபல இயக்குநர்! இது தான் DIRECTORS CUT-ஆம்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற சேவைகள் கிடைக்காது என்பதால் மக்களின் அன்றாட செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் சில சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு படங்களின் இயக்குநர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவு நல்ல வைரலாகி வருகிறது.

அதில், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் டைரக்டர்ஸ் கட், பிஸி வித் சஞ்சித் என்று பகிர்ந்துள்ளார். இதனையடுத்து மிக அழகாக முடிவெட்டியுள்ளதாக இயக்குநருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Director Gaurav narayananan Shares his Son's hair cut Photo | இயக்குநர் கௌரவ் நாராயணன் தனது மகனின் ஹேர்கட் ஃபோட்டோவை பகிர்ந்துள்ள�

People looking for online information on Gaurav, Lockdown, Quarantine will find this news story useful.